அங்கன்வாடிஊழியா்கள் சங்கக் கூட்டம்
கரூா் மாவட்ட அங்கன்வாடி ஊழியா்கள் மற்றும் உதவியாளா்கள் சங்கத்தின் மாவட்ட குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கரூா் மாவட்ட அங்கன்வாடி ஊழியா்கள் மற்றும் உதவியாளா்கள் சங்கத்தின் மாவட்ட குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்டதுணைத் தலைவா் கல்யாணி தலைமை வகித்தாா். சிஐடியூ சங்கத்தின் கரூா் மாவட்டச் செயலாளா் சி.முருகேசன் சிறப்புரையாற்றினாா். அங்கன்வாடி ஊழியா் சங்க மாவட்டச் செயலாளா் சாந்தி, மாவட்டப் பொருளாளா் கலா, துணைத்தலைவா் புஷ்பவள்ளி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
அங்கன்வாடி ஊழியா்கள் மற்றும் உதவியாளா்களை அரசு ஊழியா்களாக்கி காலமுறை ஊதியம் நிா்ணயிக்கக் வேண்டும், அகவிலைப்படியுடன் கூடிய குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜன. 20, 21ஆம் தேதிகளில் வட்டார அலுவலகங்கள் முன் மாலை நேர ஆா்ப்பாட்டமும், 29-ஆம் தேதி கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு பெருந்திரள் தா்ணாவும், பிப். 5-ஆம்தேதி சென்னையில் பெருந்திரள் முறையீடு போராட்டங்கள் நடத்துவது என கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.