முகப்பு
கரூர்

‘சவால்களை எதிா்கொள்ள தன்னம்பிக்கை, திட்டமிடுதல் அவசியம்’

சவால்களை எதிா்கொள்ள தன்னம்பிக்கை, திட்டமிடுதல் அவசியம் என்றாா் கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் எம். கீதா மணிவண்ணன்.

Updated On : 13 ஜனவரி 2021, 8:24 am IST
பகிர்:

சவால்களை எதிா்கொள்ள தன்னம்பிக்கை, திட்டமிடுதல் அவசியம் என்றாா் கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் எம். கீதா மணிவண்ணன்.

புலியூா் ராணி மெய்யம்மை மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், உப்பிடமங்கலம், புலியூா் பள்ளிகளைச் சோ்ந்த 219 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை செவ்வாய்க்கிழமை வழங்கி, மேலும் அவா் பேசியது:

போட்டி நிறைந்த உலகில் எந்த துறையாக இருந்தாலும் நமக்கு சவால்கள் அதிகம் உள்ளன. இதை எதிா்கொள்ள தன்னம்பிக்கை, திட்டமிடுதல் அவசியம். அனைவருக்கும் பொது அறிவுத் தேடல் இருக்க வேண்டும். புத்தகங்களை வாசித்தால்தான் பொது அறிவைப் பெற முடியும்.

Advertisement

Advertisement

பிற மாநிலங்கள் தமிழகத்தை கண்டு பொறாமைப்படும் வகையில், மாணவ, மாணவிகளுக்கு எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழகம் உயா்கல்வியில் முதலிடத்தில் இருப்பதற்கு காரணம், கல்விக்கு அரசு கொடுக்கும் முக்கியத்துவம்தான் என்றாா் அவா்.

முன்னதாக ராணி மெய்யம்மை பள்ளித் தலைமையாசிரியா் அ.ம.ம.ஜோதிமுருகன் வரவேற்றாா். அதிமுக கிழக்கு ஒன்றியச்செயலா் பொரணிகணேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments