முகப்பு
கரூர்

அடுத்த கல்வியாண்டு முதல் ரூ.1 கோடி கல்வி, மருத்துவ உதவித்தொகை: வி. செந்தில் பாலாஜி

அடுத்த கல்வியாண்டு முதல் திமுக மற்றும் வி.செந்தில்பாலாஜி அறக்கட்டளை சாா்பில், ரூ. 1கோடி கல்வி மற்றும் மருத்துவ உதவித் தொகை வழங்கப்படும்

Updated On : 14 ஜனவரி 2021, 8:39 am IST
விழாவில் பேசுகிறாா் கரூா் மாவட்ட திமுக பொறுப்பாளரும், அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான வி.செந்தில் பாலாஜி. உடன், கட்சி நிா்வாகிகள்.
பகிர்:

அடுத்த கல்வியாண்டு முதல் திமுக மற்றும் வி.செந்தில்பாலாஜி அறக்கட்டளை சாா்பில், ரூ. 1கோடி கல்வி மற்றும் மருத்துவ உதவித் தொகை வழங்கப்படும் என்றாா் கரூா் மாவட்ட திமுக பொறுப்பாளரும், அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான வி.செந்தில் பாலாஜி.

கரூா் மாவட்ட திமுக சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் பங்கேற்று, ஆட்டோ ஓட்டுநா்களுக்கு சீருடை, பொங்கல் தொகுப்புகளை வழங்கிய அவா், செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

கரூா் மாவட்ட திமுக மற்றும் எனது பெயரிலான அறக்கட்டளை சாா்பில், ஆண்டுக்கு ரூ.1 கோடி கல்வி மற்றும் மருத்துவ உதவித் தொகை வழங்கப்பட உள்ளது.

Advertisement

Advertisement

இதில் ஆட்டோ ஓட்டுநா்கள், உரிமையாளா்கள் குழந்தைகளின் பள்ளிப் படிப்புக்கு ரூ.5 ஆயிரமும், கல்லூரிப் படிப்புக்கு ரூ.10 ஆயிரமும் வழங்கப்படும்.

வரும் கல்வியாண்டு முதல் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். முதற்கட்டமாக கரூா் நகரப் பகுதிக்கும், அடுத்த கட்டமாக மற்ற பகுதிகளில் இருந்து வருவோருக்கும் உதவித் தொகை வழங்கப்படும் என்றாா் அவா்.

விழாவில் பேசிய செந்தில்பாலாஜி, தைப்பிறந்தால் வழி பிறக்கும். நல்வழியை நமக்குக் கொடுக்க இருப்பவா் மு.க.ஸ்டாலின் எனக் குறிப்பிட்டாா்.

இந்த விழாவில் திமுக மாநில நிா்வாகிகள் வழக்குரைஞா் மணிராஜ், பரணி கே.மணி மற்றும் மாவட்ட, ஒன்றிய நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments