முகப்பு
கிருஷ்ணகிரி

மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி இயக்குபவர்கள் சங்க ஆயத்த மாநாடு

தமிழ்நாடு ஊராட்சி மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள், துப்புரவுப் பணியாளர்கள் சங்கத்தின் ஆயத்த மாநாடு கிருஷ்ணகிரியில் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 21 மார்ச் 2013, 12:36 pm IST
பகிர்:

தமிழ்நாடு ஊராட்சி மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள், துப்புரவுப் பணியாளர்கள் சங்கத்தின் ஆயத்த மாநாடு கிருஷ்ணகிரியில் புதன்கிழமை நடைபெற்றது.

சென்னையில் வரும் ஏப்ரல் 4-ஆம் தேதி 3 அம்சக் கோரிக்கைளை வலியுறுத்தி, பேரணி நடைபெறவுள்ளது. இந்தப் பேரணி தயாரிப்பிற்காக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊராட்சி மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி இயக்குபவர்கள், துப்புரவுப் பணியாளர்கள் சங்க ஆயத்த மாநாடு நடைபெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு மாநிலப் பொருளாளர் ஜோதிமணி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் தீர்த்தகிரி கவுண்டர், செயலர் முனியப்பன், பொருளாளர் துரைசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலத் தலைவர் கிருஷ்ணன் வரவேற்றார்.

Advertisement

Advertisement

கூட்டத்திற்கு அரசு அலுவலக உதவியாளர்கள், அடிப்படை பணியாளர்கள் மாநில சங்க, அகில இந்தியத் தலைவர் கணேசன் சிறப்புரையாற்றினர்.

கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் சண்முகம், கோதண்டபாணி, மூர்த்தி, ராமர், முனுசாமி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.