முகப்பு
கிருஷ்ணகிரி

மழை வேண்டி நூதன வழிபாடு

கிருஷ்ணகிரி அருகே மழை வேண்டி, வியாழக்கிழமை நள்ளிரவில் ஒப்பாரி வைத்து பெண்கள் நூதன வழிபாடு நடத்தினர்.

Updated On : 11 மே, 2013 at 12:32 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:10 PM

கிருஷ்ணகிரி அருகே மழை வேண்டி, வியாழக்கிழமை நள்ளிரவில் ஒப்பாரி வைத்து பெண்கள் நூதன வழிபாடு நடத்தினர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நிகழாண்டில் கடும் வறட்சி நிலவுவதால் ஏரிகள், குளங்கள் வறண்டுள்ளன. இதனால், மழை வேண்டி பல்வேறு இடங்களில் சிறப்பு வழிபாடுகளும், கோயில்களில் வருண யாகமும் நடைபெற்று வருகிறது. கிருஷ்ணகிரி அருகே உள்ள பெரியகோட்டப்பள்ளி ஊராட்சி, போத்திநாயனப்பள்ளி கிராம மக்கள் மழை வேண்டி நூதன வழிபாடு நடத்தினர். அங்குள்ள வறண்ட ஏரியில் திரண்ட கிராம மக்கள் நள்ளிரவில் வருண பகவனுக்கு பூஜை செய்தும், அம்மனுக்கு கூழ் ஊற்றியும் வழிபட்டனர்.

பின்னர், பெண்கள் ஒப்பாரி வைத்து அழுதபடி, மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி அம்மனை வழிபட்டனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.