முகப்பு
கிரிக்கெட்

ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணிக்கு ரோஹித் சர்மா மிகவும் முக்கியம்: பயிற்சியாளர்

ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணிக்கு ரோஹித் சர்மா மிகவும் முக்கியம் என இந்திய அணியின் சுழற்பந்துவீச்சு பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.

Updated On : 16 ஜூன் 2026, 7:56 pm IST
ரோஹித் சர்மா - படம் | ANI
பகிர்:

ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணிக்கு ரோஹித் சர்மா மிகவும் முக்கியம் என இந்திய அணியின் சுழற்பந்துவீச்சு பயிற்சியாளர் சாய்ராஜ் பஹுதுலே தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் கடந்த 2024 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பைத் தொடருக்குப் பிறகு சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றனர். அதன் பின், அடுத்த ஆண்டே டெஸ்ட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெற்றனர். தற்போது இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் மட்டுமே அவர்கள் விளையாடி வருகின்றனர்.

இந்த நிலையில், ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணிக்கு ரோஹித் சர்மா மிகவும் முக்கியம் என இந்திய அணியின் சுழற்பந்துவீச்சு பயிற்சியாளர் சாய்ராஜ் பஹுதுலே தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

Advertisement

Advertisement

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ரோஹித் சர்மா மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர். அவர் சாம்பியன் கிரிக்கெட்டர். அவரது பேட்டிங் மட்டுமின்றி, அவரது அனுபவம் அணியில் உள்ள வீரர்களுக்கு மட்டுமின்றி கேப்டன் ஷுப்மன் கில்லுக்கும் உதவியாக இருக்கும். ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் அவர் இருப்பது மிக மிக முக்கியம். போட்டியை புரிந்துகொண்டு விளையாடக் கூடியதில் அவர் மிகவும் அனுபவம் வாய்ந்தவர் என்றார்.

ரோஹித் சர்மா அவர் விளையாடிய கடந்த நான்கு ஒருநாள் போட்டிகளில் 77 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

The Indian team's spin bowling coach has stated that Rohit Sharma is crucial for the Indian ODI team.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.