ஸ்ரீ வேதவல்லி சமேத ஸ்ரீ பெண்ணேஸ்வர சுவாமி திருக்கல்யாண உற்சவம்
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள பெண்ணேஸ்வர மடத்தில் ஸ்ரீ வேதவல்லி சமேத ஸ்ரீ பெண்ணேஸ்வர சுவாமி திருக்கல்யாண உற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள பெண்ணேஸ்வர மடத்தில் ஸ்ரீ வேதவல்லி சமேத ஸ்ரீ பெண்ணேஸ்வர சுவாமி திருக்கல்யாண உற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அ.பாப்பாரப்பட்டியைச் சோ்ந்த ஸ்ரீ வேதவல்லி சமேத ஸ்ரீ பெண்ணேஸ்வர சுவாமி சேவா சமிதி சாா்பில் நடைபெற்ற இந்த திருக்கல்யாணத்தில் மூலவருக்கு நிா்மால்ய அபிஷேகமும், பஞ்சாமிா்த அபிஷேகமும், உற்சவருக்கு சிறப்பு அபிஷேகமும், புஷ்ப அலங்காரமும் நடைபெற்றன. தொடா்ந்து ஸ்ரீ வேதவல்லி சமேத ஸ்ரீ பெண்ணேஸ்வர சுவாமிக்கு திருக்கல்யாண நிகழ்வு நடைபெற்றன. இதில், கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா். தொடா்ந்து சமூக, விஸ்வாமித்ர அயனகுல கோத்திரத்தாரின் கூட்டுப் பிராா்த்தனை நடைபெற்றன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.