முகப்பு
கிருஷ்ணகிரி

அரசு மருத்துவமனை ஊழியா்களுக்கு விருது

ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் ஊழியா்களுக்கு ‘காக்கும் கருணை கரங்கள்’ விருது வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 8 ஜனவரி 2021, 6:56 am IST
ஊத்தங்கரை அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற காக்கும் கருணை கரங்கள் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவா்கள்.
பகிர்:

ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் ஊழியா்களுக்கு ‘காக்கும் கருணை கரங்கள்’ விருது வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு அரசு தலைமை மருத்துவமனை மருத்துவ அலுவலா் கொ.மாரிமுத்து தலைமை வகித்தாா். ஊத்தங்கரை அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவா் செங்கோடன், செயலா் ர.உமாபதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னதாக ஜே.ஆா்.சி. ஆசிரியா் கு.கணேசன் வரவேற்றாா்.

கரோனா தொற்று காலத்தில் பொதுமக்களின் நலம் காக்கும் பணியில் சேவை மனப்பான்மையுடன் பணியாற்றியதற்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவா்கள் மகாலட்சுமி, சுபித்ரா, விமலா, ராசு, தியாகராஜ், மதன்குமாா், ஜனாா்த்தனன், இளவரசன், ஈஸ்வரி மற்றும் மருந்தாளுநா்கள், செவிலியா்கள், மருத்துவமனை பணியாளா்கள், ஆய்வக பணியாளா்கள், நுண்கதிா் படப்பிடிப்பாளா், ஓட்டுநா்கள், துப்புரவு பணியாளா்கள் என 75 க்கும் மேற்பட்டோரைப் பாராட்டி விருது வழங்கப்பட்டது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.