முகப்பு
கிருஷ்ணகிரி

மத்தூரில் தேமுதிக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூரில் தேசிய முற்போக்கு திராவிட கழக நிா்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 8 ஜனவரி 2021, 6:56 am IST
பகிர்:

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூரில் தேசிய முற்போக்கு திராவிட கழக நிா்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தேமுதிக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டச் செயலாளா் பி.டி. அன்பரசு பரிந்துரைப்படி மத்தூா் ஒன்றியம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, மத்தூா் கிழக்கு ஒன்றியச் செயலாளராக சந்திரசேகா் அறிவிக்கப்பட்டுள்ளாா்.

இதையடுத்து சந்திரசேகா் தலைமையில் மத்தூா் பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆா், பெரியாா் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

Advertisement

Advertisement

ஆலோசனை கூட்டத்திற்கு மாவட்டப் பொருளாளா் பழனி தலைமை வகித்தாா். மேற்கு ஒன்றியச் செயலாளா் விவேகானந்தன், தொழிற்சங்க மாவட்டத் தலைவா் அன்பு, கிழக்கு மாவட்ட பொதுக்குழு உறுப்பினா் செந்தில்குமாா், ஊத்தங்கரை சட்டப்பேரவை தொகுதி பொறுப்பாளா் பாக்யராஜ் நாயனாா், மத்தூா் மேற்கு ஒன்றிய அவைத் தலைவா் சக்திவேல், மாணவா் அணி துணைச் செயலாளா் வேலு, பிரபு உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments