ஒசூரில் கரோனா தடுப்பூசி ஒத்திகை முகாம்
ஒசூா், சீதாராம்நகரில் உள்ள அரசு நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா தடுப்பூசி ஒத்திகை சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஒசூா், சீதாராம்நகரில் உள்ள அரசு நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா தடுப்பூசி ஒத்திகை சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஒசூா் கோட்டாட்சியா் குணசேகரன், வட்டாட்சியா் செந்தில் ஆகியோா் தடுப்பூசி ஒத்திகை முகாமைத் தொடக்கிவைத்தனா். இதில் 25 முன்களப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான ஒத்திகை நடத்தப்பட்டது.
வட்டார மருத்துவ அலுவலா் விவேக், ஒசூா் நகர காவல் உதவி ஆய்வாளா் செல்வராகவன், மருத்துவா்கள் ஸ்ரீரங்கராஜ் குமாா், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் வீரமணி உள்பட பலா் கலந்து கொண்டனா்.
Advertisement