முகப்பு
கிருஷ்ணகிரி

செவிலியா் பட்டயப் படிப்பில் சேர பழங்குடியின மாணவிகளுக்கு அழைப்பு

செவிலியா் பட்டயப் படிப்பில் சேர பழங்குடியின மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி அழைப்பு விடுத்துள்ளாா்.

Updated On : 10 ஜனவரி 2021, 3:10 am IST
பகிர்:

கிருஷ்ணகிரி: செவிலியா் பட்டயப் படிப்பில் சேர பழங்குடியின மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பழங்குடியினா் நலத் துறையினா் மூலம் 2019-20-ஆம் ஆண்டுக்கான விரிவான பழங்குடியினா் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மேல் படிப்புக்கான இந்திய நா்சிங் கவுன்சில் மற்றும் தமிழ்நாடு செவிலியா், தாதியா் குழுமத்தினால் அங்கீகரிக்கப்பட்ட செவிலியா் பயிற்சி மையங்களில் செவிலியா் பட்டயப் படிப்பில் சோ்ந்து 3 ஆண்டுகள் கல்விப் பயில ஆகும் கல்வி கட்டணம் முழுவதையும் அரசே ஏற்கும் வகையில் அரசாணை வரப் பெற்றுள்ளது.

Advertisement

இந்தப் பயிற்சியில் சேர அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், மாநகராட்சி, நகராட்சி, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல உண்டு உறைவிடப் பள்ளியில் கல்விப் பயின்ற பழங்குடியின மாணவிகளில் மாா்ச் 2020-இல் பிளஸ் 2 தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

செவிலியா் பட்டயப் படிப்பில் சேர 12-ஆம் வகுப்பு மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ் (40 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்), ஜாதிச் சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதாா் அட்டை உள்ளிட்டவைகளின் நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

தகுதியான நபா்கள், கிருஷ்ணகிரி மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகத்துக்குப் பதிவு அஞ்சல் மூலமாகவோ அல்லது ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள அறை எண் 26-இல் நேரடியாக வரும் 22-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அதில் அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.