முகப்பு
கிரிக்கெட்

2-வது டி20: இந்தியா பேட்டிங்; 15 வயதில் அறிமுகமாகி வரலாறு படைத்த வைபவ் சூர்யவன்ஷி!

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

Updated On : 4 ஜூலை 2026, 6:47 pm IST
- படம் | பிசிசிஐ
பகிர்:

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

இந்தியா - இங்கிலாந்து இடையேயான இரண்டாவது டி20 போட்டி மான்செஸ்டரில் இன்று (ஜூலை 4) நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார்.

இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சஞ்சு சாம்சனுக்குப் பதிலாக அறிமுக வீரராக இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Advertisement

Advertisement

இந்திய அணிக்காக சர்வதேசப் போட்டிகளில் அறிமுகமான மிகவும் இளம் வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்து வைபவ் சூர்யவன்ஷி வரலாறு படைத்துள்ளார். அவருக்கு 15 வயது (15 ஆண்டுகள், 3 மாதங்கள், 8 நாட்கள்) என்பது குறிப்பிடத்தக்கது.

summary

The Indian team won the toss and elected to bat in the second T20 match against England.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments