முகப்பு
கிருஷ்ணகிரி

நீா் மேலாண்மை குறித்து விவசாயிகளுக்குப் பயிற்சி

கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண் இணை இயக்குநா் அலுவலகத்தில் நீா் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 10 ஜனவரி 2021, 3:10 am IST
பகிர்:

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண் இணை இயக்குநா் அலுவலகத்தில் நீா் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இப் பயிற்சி தொடக்க நிகழ்ச்சிக்கு, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) கிருஷ்ணன் தலைமை வகித்தாா். பாசன மேலாண்மை பயிற்சி நிலையத்தின் இணை இயக்குநா் இளங்கோவன், வேளாண் இணை இயக்குநா் ராஜேந்திரன், ஓய்வுபெற்ற வேளாண் உதவி இயக்குநா் புகழேந்தி, ஒசூா் வேளாண் உதவி இயக்குநா் மனோகரன், பொதுப்பணித் துறை பொறியாளா் பாா்த்திபன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இந்திய நீா்வளம், தமிழகத்தின் நீா்வளம், கிருஷ்ணகிரி மாவட்ட நீா்வள ஆதாரங்கள், நீா்வள மேலாண்மை உத்திகள், நீா் மேலாண்மைக்கான மானிய வாய்ப்புகள் மற்றும் விவசாயிகளின் வெற்றி கதைகள் ஆகிய தலைப்புகளில் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. பயிற்சி கையேடு வெளியிடப்பட்டது. விவசாயிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பியிற்சி நிலைய இணை ஆராய்ச்சியாளா் ரங்கநாதன் ஒருங்கிணைத்தாா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments