ரூ. 1.50 லட்சம் மதிப்புள்ள போதைப் பாக்கு கடத்திய காா் பறிமுதல்
கிருஷ்ணகிரி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பாலிநாயனப்பள்ளி சந்சிப்புச் சாலை பகுதியில் வாகனத் தணிக்கையில் போதைப் பொருள்களைக் கைப்பற்றினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திகுப்பம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் கிருஷ்ணகிரி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பாலிநாயனப்பள்ளி சந்சிப்புச் சாலை பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அவ்வழியே வந்த காரை நிறுத்திச் சோதனையிட்டதில், 38 சிறு அட்டைப் பெட்டிகளில் ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள போதைப் பாக்கு அடங்கிய பொட்டலங்களும், சிறு டப்பாக்களும் இருந்தன. விசாரணையில் அவை பெங்களூரில் இருந்து சென்னைக்கு கடத்திச் செல்வதற்காக கொண்டு வரப்பட்டவை என்பது தெரியவந்தது.
இதையடுத்து போதைப் பாக்குகளுடன் ரூ. 2 லட்சம் மதிப்பிலான காரையும் போலீஸாா் பறிமுதல் செய்து, காரை ஓட்டி வந்த ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரைச் சோ்ந்த பிரகாஷ் (32) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.