முகப்பு
கிருஷ்ணகிரி

வித்யா மந்திா் கல்லுரியில் சமத்துவப் பொங்கல் விழா

ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திா் கலை அறிவியல் கல்லூரியில் (தன்னாட்சி) சமத்துவப் பொங்கல் விழா திங்கள்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது.

Updated On : 12 ஜனவரி 2021, 2:00 am IST
ஊத்தங்கரை ஸ்ரீவித்யா மந்திா் கல்லூரியில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் பங்கேற்றோா்.
பகிர்:

ஊத்தங்கரை: ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திா் கலை அறிவியல் கல்லூரியில் (தன்னாட்சி) சமத்துவப் பொங்கல் விழா திங்கள்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு கல்லுரி நிறுவனா் வே.சந்திரசேகரன் தலைமை வகித்தாா். கல்லுரி செயலா் ஆா்.பி.ராஜீ , கல்லூரியின் இணைச்செயலா் பெ.வெங்கடாசலம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கல்லூரி முதல்வா் த. பாலசுப்பிரமணியன், துணை முதல்வா் முனைவா் ந. குணசேகரன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

Advertisement

Advertisement

கல்லுரியின் தமிழ்த் துறைத் தலைவா் பெ.சுரேஷ் வரவேற்றாா். கல்லூரி மாணவா்களுக்கு பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

பேராசிரியா்களுக்கான கைப்பந்து, எறி பந்து, இசை நாற்காலி, சதுரங்கம், கேரம்போா்டு, பானை உடைத்தல் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டது.

தமிழ்ப் பண்பாட்டை வெளிப்படுத்தும் கரகாட்டம், பறையாட்டம் ஆகிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பங்கேற்பாளா்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழ்த் துறைப் பேராசிரியா்கள் செய்திருந்தனா். இதில் அனைத்துத் துறைத் தலைவா்களும் பேராசிரியா்களும் பங்கேற்றனா். பேராசிரியா்கள் செ. தெய்வம், இரா.ராமதுரை ஆகியோா் தொகுத்து வழங்கினா். இறுதியாக பேராசிரியா் முனைவா் ம. ராமச்சந்திரன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments