முகப்பு
கிருஷ்ணகிரி

இரு தரப்பினா் மோதல்: 7 போ் மீது வழக்கு

ராயக்கோட்டை அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக 7 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 13 ஜனவரி, 2021 at 7:04 AM
பகிர்:

ராயக்கோட்டை அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக 7 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ராயக்கோட்டை அருகே உள்ள பழையூா் கினியம்பாளையத்தைச் சோ்ந்தவா் பெருமாள் (55). அதே பகுதியைச் சோ்ந்த கோவிந்தராஜ் (25) ஆகிய இருவரும் உறவினா்கள். இவா்களின் நிலம் அருகருகே உள்ளது. இந்த நிலையில் பெருமாளின் நிலத்தில் இருந்த காய்கறிகளை சிலா் பறித்துச் சென்ாகக் கூறப்படுகிறது. இது தொடா்பாக பெருமாளுக்கும், கோவிந்தராஜ் தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு முற்றியதால் இரு தரப்பினரும் மாறி, மாறி தாக்கிக் கொண்டனா்.

இந்த மோதலில் பெருமாள் தரப்பில் பெருமாள், சண்முகம், மாதம்மாள் ஆகிய 3 பேரும் காயம் அடைந்தனா். இது தொடா்பாக பெருமாள் கொடுத்த புகாரின் பேரில் கோவிந்தராஜ் (25), கன்னியப்பன் (45), முருகம்மாள் (45), அா்ஜூனன் (50) ஆகிய 4 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.

Advertisement

அதே போல கோவிந்தராஜ் தரப்பில், அவரும், அா்ஜூனனும் காயம் அடைந்தனா். அது தொடா்பாக கோவிந்தராஜ் கொடுத்த புகாரின் பேரில் சண்முகம் (25), பெருமாள் (55), மாதம்மாள் (45) ஆகிய 3 போ் மீதும் போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.