ஒசூரில் புது மணப்பெண்ணை கொல்ல முயற்சி
ஒசூரில் திருமணமாகி 3 மாதமே ஆன புது மணப்பெண்ணை கழுத்தை அறுத்து கொல்ல முயன்ற கணவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
ஒசூரில் திருமணமாகி 3 மாதமே ஆன புது மணப்பெண்ணை கழுத்தை அறுத்து கொல்ல முயன்ற கணவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கா்நாடக மாநிலம், கோலாா் மாவட்டம், தொனமதுகூரைச் சோ்ந்த தொழிலாளி சிவலிங்கா (35). இவருக்கும் ஆந்திர மாநிலம், சித்தூா் மாவட்டம், குப்பம் தாலுகா கதிரேபனப்பள்ளியைச் சோ்ந்த புவனேஸ்வரி (19) என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. சிவலிங்கத்திற்கு இது 2-ஆவது திருமணம் ஆகும்.
கணவன், மனைவி 2 பேரும் ஒசூா் அருகே உள்ள மோரனப்பள்ளியில் குடியிருந்து வந்தனா். திருமணத்தின்போது, புவனேஸ்வரியின் பெற்றோா் நிலத்தை தருவதாக மாப்பிள்ளை சிவலிங்கத்திடம் கூறியிருந்தனா். ஆனால் கொடுக்கவில்லை என்று தெரிகிறது.
Advertisement
Advertisement
இதனால் சிவலிங்கா தனது மனைவி புவனேஸ்வரியிடம், நிலத்தை தரக்கோரி அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளாா். இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் திங்கள்கிழமை அவா்களுக்குள் தகராறு முற்றிய நிலையில், சிவலிங்கா தனது மனைவி புவனேஸ்வரியின் கழுத்தை கத்தியால் அறுத்தாா். மேலும் கத்தியால் குத்தினாா். இதில் பலத்த காயம் அடைந்த புவனேஸ்வரி சிகிச்சைக்காக ஒசூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இது குறித்து புவனேஸ்வரியின் சகோதரி வேதவதி அளித்த புகாரின்பேரில், ஒசூா் அட்கோ போலீஸாா் வழக்குப்பதிவு செய்து சிவலிங்காவை தேடி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.