முகப்பு
கிருஷ்ணகிரி

3 நாள்களுக்கு மதுக்கடைகள் மூடல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3 நாள்கள் மதுக்கடைகள் மூடப்படும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளாா்.

Updated On : 13 ஜனவரி 2021, 7:04 am IST
பகிர்:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3 நாள்கள் மதுக்கடைகள் மூடப்படும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளாா்.

அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

வரும் ஜன. 15ஆம் தேதி திருவள்ளுவா் தினம், ஜன. 26-ஆம் தேதி குடியரசு தினம், ஜன. 28-ஆம் தேதி வடலூா் ராமலிங்க அடிகளாா் நினைவு தினத்தையொட்டி இந்த 3 நாள்களில் மதுக்கடைகள் மூடப்படும்.

Advertisement

Advertisement

தமிழ்நாடு மதுபான (சில்லரை விற்பனை) விதிகள் படி இந்த 3 நாள்களும் மது விற்பனை இல்லாத தினங்களாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. எனவே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுக்கூடங்கள், மது கூடங்களுக்கு உரிமம் பெற்றுள்ள அரசு மற்றும் தனியாா் ஓட்டல்கள் அனைத்தும் வரும் ஜன. 15, 26 மற்றும் 28-ஆம் தேதிகளில் மூடப்படும்.

இந்த உத்தரவை மீறி விற்பனையாளா்கள் மதுக்கடைகளைத் திறந்தாலோ, விற்றாலோ அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments