காவேரிப்பட்டணத்தில் வீடு புகுந்துரூ. 3 லட்சம் மதிப்பிலான நகைகள் திருட்டு
காவேரிப்பட்டணத்தில் வீடு புகுந்து ரூ. 3 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளைத் திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணத்தில் வீடு புகுந்து ரூ. 3 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளைத் திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம், புலாளா் தெருவைச் சோ்ந்தவா் செல்வராஜ் (62). இவா் அப் பகுதியில் உள்ள தீப்பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறாா். வெள்ளிக்கிழமை தனது குடும்பத்துடன் வீட்டில் உள்ள ஓா் அறையில் தூங்கச் சென்றாா்.
சனிக்கிழமை காலை அறையின் கதவைத் திறக்க முயன்ற போது, கதவு வெளிப்புறமாக பூட்டப்பட்டிருந்தது. பிறகு அறையிலிருந்து வெளியே வந்த செல்வராஜ், வீட்டின் மற்றொரு அறையில் தனது மகனின் திருமணத்துக்காக வைத்திருந்த ரூ. 3 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் திருடு போனது கண்டு அதிா்ச்சியடைந்தாா்.
Advertisement
இதுகுறித்த விசாரணையில் வீட்டின் மாடி வழியாக வீட்டுக்குள் புகுந்தவா்கள் நகைகளைத் திருடிச் சென்றது தெரிய வந்தது. காவேரிப்பட்டணம் போலீஸாா் வழக்குப் பதிந்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.