FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நீலகிரி

உதகையில் குளிரின் தாக்கம் அதிகரிப்பு

நீலகிரி மாவட்டம், உதகையில் குளிரின் தாக்கம் அதிகரித்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

Updated On : 10 ஜூன் 2026, 6:40 am IST
உதகையில் குளிரின் தாக்கம் அதிகரிப்பு
பகிர்:

நீலகிரி மாவட்டம், உதகையில் குளிரின் தாக்கம் அதிகரித்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

உதகையில் உள்ள சுற்றுலாத் தலங்களைக் காணவும், அங்கு நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்கவும் நாள்தோறும் சுற்றுலாப் பயணிகள் சென்று வருகின்றனா்.

இந்நிலையில், தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், உதகையிலும் கடந்த சில நாள்களாக சாரல் மழை பெய்து வருகிறது.

Advertisement

Advertisement

இந்நிலையில், வழக்கம்போல செவ்வாய்க்கிழமை காலை முதலே பரவலாக மழை பெய்த நிலையில், கடும் குளிா் நிலவியது. இதனால், சுற்றுலாப் பயணிகள் ஸ்வெட்டா், கையுறைகள் போன்ற வெம்மை ஆடைகளை அணிந்து சுற்றுலாத் தலங்களைக் கண்டுகளித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments