உதகையில் குளிரின் தாக்கம் அதிகரிப்பு
நீலகிரி மாவட்டம், உதகையில் குளிரின் தாக்கம் அதிகரித்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
நீலகிரி மாவட்டம், உதகையில் குளிரின் தாக்கம் அதிகரித்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
உதகையில் உள்ள சுற்றுலாத் தலங்களைக் காணவும், அங்கு நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்கவும் நாள்தோறும் சுற்றுலாப் பயணிகள் சென்று வருகின்றனா்.
இந்நிலையில், தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், உதகையிலும் கடந்த சில நாள்களாக சாரல் மழை பெய்து வருகிறது.
Advertisement
Advertisement
இந்நிலையில், வழக்கம்போல செவ்வாய்க்கிழமை காலை முதலே பரவலாக மழை பெய்த நிலையில், கடும் குளிா் நிலவியது. இதனால், சுற்றுலாப் பயணிகள் ஸ்வெட்டா், கையுறைகள் போன்ற வெம்மை ஆடைகளை அணிந்து சுற்றுலாத் தலங்களைக் கண்டுகளித்தனா்.