பழ.கருப்பையா வீட்டில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டவர் கைது
சென்னை, மே 24- அதிமுக எம்எல்ஏ பழ.கருப்பையா வீட்டில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார். சென்னை ராயப்பேட்டை காவல் நிலையம் அருகே பழ. கருப்பையா வசித்து வருகிறார். இன்று பகல், மர்ம நபர் ஒருவ
சென்னை, மே 24- அதிமுக எம்எல்ஏ பழ.கருப்பையா வீட்டில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார்.
சென்னை ராயப்பேட்டை காவல் நிலையம் அருகே பழ. கருப்பையா வசித்து வருகிறார். இன்று பகல், மர்ம நபர் ஒருவர் அவரது வீட்டுக்குள் புகுந்து அவரது மனைவியின் சங்கிலியை பறித்துக் கொண்டு ஓடினார்.
இந்நிலையில், அந்த நபர் அவசரத்தில் தனது செல்போன் மற்றும் ஹெல்மட்டை பழ.கருப்பையா வீட்டில் தவறவிட்டுச் சென்றார். இதையடுத்து, திரும்பி வந்த அந்த நபர் பழ.கருப்பையாவின் மனைவியிடம் சங்கிலியை தந்துவிடுவதாகவும், தனது போனையும் ஹெல்மட்டையும் தன்னிடம் ஒப்படைக்குமாறும் கெஞ்சினார்.
Advertisement
Advertisement
சங்கிலி பறிப்பு குறித்து அருகில் உள்ள காவல் நிலையத்தில் தகவல் அளிக்கப்பட்ட நிலையில், விரைந்து வந்த போலீஸார் அந்த நபரை கைது செய்தனர்.