திருவள்ளூர் அருகே வேலைக்குச் சென்ற பெண் மாயம்
வேப்பம்பட்டு அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி பிரியா(20).இவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.பிரியா,
திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டில் வேலைக்கு சென்ற பெண்ணை காணவில்லை.
வேப்பம்பட்டு அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி பிரியா(20).இவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.பிரியா, ஆவடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த 8-ம் தேதி அவர் வழக்கம் போல் வேலைக்கு சென்றார்.ஆனால் அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது கணவர் மணிகண்டன் செவ்வாப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.இதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார் பிரியாவை தேடி வருகின்றனர்.