முகப்பு
தற்போதைய செய்திகள்

பள்ளிப்பட்டு அருகே கிணற்றில் தவறி விழுந்த வாலிபர் பலி

பள்ளிப்பட்டு பெருமா நல்லூரை சேர்ந்தவர் மன்னார் (22). இவர் ஆவடியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். நேற்று சிவராத்திரி பண்டிகையையொட்டி மோட்டார் சைக்கிளில் பள்ளிப்பட்டுக்கு புறப்பட்டு வந்தார். அப்போது

Updated On : 11 மார்ச், 2013 at 3:39 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:05 PM

பள்ளிப்பட்டு பெருமா நல்லூரை சேர்ந்தவர் மன்னார் (22). இவர் ஆவடியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். நேற்று சிவராத்திரி பண்டிகையையொட்டி மோட்டார் சைக்கிளில் பள்ளிப்பட்டுக்கு புறப்பட்டு வந்தார். அப்போது அவர் வேகமாக வந்தபோது நிலை தடுமாறி சாலையோர கிணற்றில் தவறி விழுந்தார். இதில் அவர் கிணற்றிலேயே பரிதாபமாக இறந்தார். மன்னார் இறந்த தகவல் அவரது மனைவி ஆனந்திக்கு தெரியபடுத்தினர். அதிர்ச்சி அடைந்த அவர் உடனே தீக்குளித்துவிட்டார். அக்கம்பக்கத்தினர் அவரை காப்பாற்றி திருத்தணி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.கடந்த 6 மாதத்திற்கு முன்புதான் மன்னார்-ஆனந்தி காதல் திருமணம் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.