முகப்பு
தற்போதைய செய்திகள்

பிரதமர் குறித்து விமர்சனம்: நரேந்திரமோடிக்கு முன்னாள் காங்கிரஸ் உறுப்பினர் நோட்டீஸ்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் உறுப்பினர் கே.கே.பென்சன், குஜராத் முதல்வர் நரேந்திரமோடிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அண்மையில் நடைபெற்ற பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில், பிரதமர் மன்மோகன்சிங்கை

Updated On : 11 மார்ச், 2013 at 6:48 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:05 PM

பிரதமர் மன்மோகன்சிங் குறித்த விமர்சனங்களை திரும்பபெற வேண்டும் அல்லது வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி குஜராத் முதல்வர் நரேந்திரமோடிக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் உறுப்பினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் உறுப்பினர் கே.கே.பென்சன், குஜராத் முதல்வர் நரேந்திரமோடிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அண்மையில் நடைபெற்ற பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில், பிரதமர் மன்மோகன்சிங்கை சோனியாகாந்தி குடும்பத்தின் இரவுகாவலர் என்று நரேந்திரமோடி விமர்சித்துள்ளதை கடுமையாக ஆட்சேபித்துள்ள பென்சன், நோட்டீஸ் கிடைத்த 3 நாள்களுக்குள் இந்த விமர்சனத்தை திரும்பபெற வேண்டும் அல்லது வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று நோட்டீசில் குறிப்பிட்டுள்ளார். இதை செய்ய தவறும்பட்சத்தில் பெங்களூர் தலைமை மாநகர மேஜெஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் தனியார் புகார் அளிப்பேன் என்று தெரிவித்துள்ளார். பிரதமர் பதவியை பொது இடத்தில் நரேந்திரமோடி அவமானப்படுத்தி, தரம்தாழ்த்தி, களங்கப்படுத்திவிட்டதாக பென்சன், நோட்டீசில் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.