முகப்பு
தற்போதைய செய்திகள்

இந்தியாவில், கோவை உள்ளிட்ட 38 நகரங்களில் கேபிள் டிவி சேவை இன்றுடன் நிறுத்தம்

இந்தியாவில் 14 மாநிலங்களில் உள்ள 38 நகரங்களில் கேபிள் டிவியை டிஜிட்டல் மயமாக்குவதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவு பெறுகிறது.

Updated On : 1 ஏப்ரல் 2013, 12:53 pm IST
பகிர்:

இந்தியாவில் 14 மாநிலங்களில் உள்ள 38 நகரங்களில் கேபிள் டிவியை டிஜிட்டல் மயமாக்குவதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவு பெறுகிறது.

இதனால், செட் டாப் பாக்ஸ் பொறுத்தாத டிவிக்கள் இன்று கேபிள் டிவி சேவை நிறுத்தப்படும்.

இந்தியாவில் கேபிள் டிவி சேவையை டிஜிட்டல் மயமாக்குவதற்காக இரண்டாவது கட்டமாக நிர்ணயிக்கப்பட்ட 38 நகரகங்களுக்கு மார்ச் 31ம் தேதி தான் கடைசி நாள். இதில் 75 சதவீதப் பணிகள் முடிவடைந்து விட்டாலும், பல நகரங்களில் டிஜிட்டல்மயமாக்கும் பணி முழுமையாக முடிவடையவில்லை.

Advertisement

Advertisement

ஆக்ரா, ஹைதராபாத், மீரட், வாரணாசி, கோயம்பத்தூர் உள்ளிட்ட 38 நகரங்களில் இன்று கேபிள் டிவி சேவை நிறுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.