இந்தியாவில் முதலீடு : ஜப்பானுக்கு புறப்பட்டார் சிதம்பரம்
இந்தியாவில் வெளிநாட்டு முதலீட்டை அதிகரிக்கும் வகையில், ஜப்பான் நாட்டை முதலீடு செய்ய அழைப்பதற்காக அந்நாட்டுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம்.
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:06 PM
இந்தியாவில் வெளிநாட்டு முதலீட்டை அதிகரிக்கும் வகையில், ஜப்பான் நாட்டை முதலீடு செய்ய அழைப்பதற்காக அந்நாட்டுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம்.
இந்தியாவில், அன்னிய முதலீட்டை கவரும் நடவடிக்கைகளில் சிதம்பரம் ஈடுபட்டுள்ளார். கடந்த ஜனவரி மாதம் சிங்கப்பூர், ஹாங்காங், பிராக்பர்ட், லண்டன் போன்ற இடங்களுக்குச் சென்று அன்னிய முதலீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த நிலையில், இன்று ஜப்பானுக்கு மூன்று நாள் பயணமாக சிதம்பரம் புறப்பட்டுச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Advertisement