தமிழக அரசியல்வாதிகள் மக்களை முட்டாளாக்குகிறார்கள் : அர்ஜூன ரணதுங்க
தமிழக அரசியல்வாதிகள், தமிழக மக்களை முட்டாளாக்கும் வகையில் செயல்படுகிறார்கள் என்று இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் விரர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
தமிழக அரசியல்வாதிகள், தமிழக மக்களை முட்டாளாக்கும் வகையில் செயல்படுகிறார்கள் என்று இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் விரர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியின் போது பேசிய அர்ஜூன ரணதுங்க, அரசியலும், விளையாட்டும் தனித்தனியாக வைக்கப்பட வேண்டும் என்பது எனது கருத்து. ஆனால் உண்மை நிலவரம் அப்படி இல்லை. அரசியலும், விளையாட்டும் பிரிக்க முடியாததாகி விட்டது. கடந்த சில ஆண்டுகளாகவே இப்படித்தான் இருக்கிறது. அதிலும், இந்தியாவில் பொதுத் தேர்தல் நடக்கும் போதெல்லாம் இதுபோல நடப்பது வழக்கமாகிவிட்டது. தமிழக மக்களை முட்டாளாக்கி, அதன் மூலம் முடிந்தவரை ஆதாயம் தேட பார்க்கிறார்கள் என்று கூறியுள்ளார்.