பலாத்கார சம்பவங்கள் : வெளிநாட்டு பெண் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்தது
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பலாத்கார சம்பவங்களைப் பற்றிய செய்திகளால், வெளிநாட்டு பெண் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பலாத்கார சம்பவங்களைப் பற்றிய செய்திகளால், வெளிநாட்டு பெண் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் கடந்த டிசம்பர் மாதம் ஓடும் பேருந்தில் மாணவி, ஒரு கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் சர்வதேச அளவில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் பாலியல் பலாத்கார சம்பவங்கள் பற்றிய செய்திகள் அதிகமாக வெளிவரத் துவங்கின. இதன் காரணமாக, கடந்த 3 மாதங்களாக இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு பெண் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்திருப்பதாகவும், ஆண்டு தோறும் வெளிநட்டுப் பயணிகளின் எண்ணிக்கை 25 சதவீதம் குறைந்து கொண்டே வருவதாகவும் இந்திய வணிகம் மற்றும் தொழில்துறை ஒருங்கிணைப்பு சங்கம் (அசோசம்) தெரிவித்துள்ளது.