மாநிலங்களவையை சுமுகமாக நடத்துவது தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டம் தோல்வி
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் பகுதி சுமுகமாக நடைபெறவில்லை.இந்நிலையில் பட்ஜெட் கூட்டத்தின் தொடரின் இரண்டாவது பகுதி நாளை தொடங்குகிறது. இதனால் மாநிலங்களவையை எந்தவித
மாநிலங்களவையை சுமுகமாக நடத்துவது தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒருமித்த கருத்து ஏற்படாமல் முடிந்தது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் பகுதி சுமுகமாக நடைபெறவில்லை.இந்நிலையில் பட்ஜெட் கூட்டத்தின் தொடரின் இரண்டாவது பகுதி நாளை தொடங்குகிறது. இதனால் மாநிலங்களவையை எந்தவித பிரச்னையும் இன்றி நடத்துவது தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம் இன்று நடைபெற்றது.மாநிலங்களவைத் தலைவர் ஹமீது அன்சாரி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங் உள்பட அனைத்துக் கட்சியினர் கலந்து கொண்டனர்.ஆனால் இக்கூட்டத்தில் மாநிலங்களவையை சுமுகமாக நடத்துவது தொடர்பான கருத்து ஏற்படாமல் முடிந்தது.