முகப்பு
தற்போதைய செய்திகள்

6வது ஐ.பி.எல் கிரிக்கெட்: தில்லி அணி அபார வெற்றி

6வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் இன்றைய முதல் ஆட்டத்தில் தில்லி அணியுடன்‌, மும்பை அணி மோதுகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்துள்ளது.அணியில் அதிகபட்சமாக சச்சின் 54 ரன்கள் எடுத்தார்.

Updated On : 21 ஏப்ரல், 2013 at 7:42 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:08 PM

6வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் இன்றைய முதல் ஆட்டத்தில் தில்லி அணியுடன்‌, மும்பை அணி மோதுகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்துள்ளது.அணியில் அதிகபட்சமாக சச்சின் 54 ரன்கள் எடுத்தார்.இதையடுத்து 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய தில்லி அணி 17.2 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தில்லி அணி சார்பில் சேவாக் அதிரடியாக  விளையாடி 57 பந்துகளில் 95 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 6 தொடர் தோல்விகளுக்குப் பின் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் முதல் வெற்றி இது ஆகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.