ஐபிஎல் போட்டியைத் தடை செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு
ஐபிஎல் போட்டியைத் தடை செய்ய உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
ஐபிஎல் போட்டியைத் தடை செய்ய உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
ஐபிஎல் போட்டியைத் தடை செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்றம், இப்போட்டியில் பங்கேற்றுள்ள சில வீரர்கள் செய்யும் முறைகேடு காரணமாக, போட்டியையே தடை செய்வது என்பது தவறானது என்று தெரிவித்துள்ளது.
லக்னோவைச் சேர்ந்த சுதர்ஷ் அஸ்வதி தாக்கல் செய்த மனுவில், ஐபிஎல் போட்டிகளில் வீரர்களை ஏலம் எடுப்பதில் இருந்து பல்வேறு முறைகேடுகள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. ஐபிஎல் போட்டியில், பலரது கருப்புப் பணமும், சமூக விரோதமாக சம்பாதித்த பணமும் அதிகமாக குவிந்து வருகிறது. இதனை உடனடியாக விசாரணைக்கு உட்படுத்த வேண்டும், விசாரணை முடியும் வரை ஐபிஎல் போட்டிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
Advertisement
இந்த மனுவை இன்று காலை விசாரித்த நீதிபதிகள் பி.எஸ். சௌஹான் மற்றும் தீபக் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு, இதனை அவசர மனுவாக விசாரிக்க ஏற்றுக் கொண்டது. மேலும், மனு மீதான விசாரணை இன்று பிற்பகல் 2 மணியளவில் நடைபெறும் என்றும் உத்தரவிட்டது. அதன்படி, இன்று 2 மணியளவில் மனுவை விசாரித்த நீதிபதிகள், ஐபிஎல் போட்டியில் பங்கேற்றுள்ள சில வீரர்கள் செய்யும் முறைகேடு காரணமாக, போட்டியையே தடை செய்வது என்பது தவறானது என்று தெரிவித்துள்ளனர்.