கிரிக்கெட் சூதாட்டம் : முன்னாள் ரஞ்சி விளையாட்டு வீரர் கைது
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட ரஞ்சி முன்னாள் விளையாட்டு வீரர் பாபுராவ் யாதவ் கைது செய்யப்பட்டுள்ளார்.
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:10 PM
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட ரஞ்சி முன்னாள் விளையாட்டு வீரர் பாபுராவ் யாதவ் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிரிக்கெட் சூதாட்ட தரகர்களுக்கு, கிரிக்கெட் வீரர்களை அறிமுகம் செய்து வைத்த குற்றத்துக்காக இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த 5 நாட்களுக்கு முன்பே தில்லி போலீசார் இவரை தில்லிக்கு அழைத்து விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையின் முடிவில், அவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
Advertisement