முகப்பு
தற்போதைய செய்திகள்

காவிரி மேற்பார்வை குழுக் கூட்டம் மீண்டும் ஜூன் 12ல் கூடுகிறது

தமிழக அரசின் தொடர் முயற்சியின் காரணமாக, காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது. ஆனால் அந்த தீர்ப்பினை நிறைவேற்றுவதற்கான காவிரி மேலாண்மைக்குழுவை அமைக்க மத்திய அரசு காலம் தாழ்த்தியதால், தமிழக அரசு மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த

Updated On : 1 ஜூன் 2013, 3:53 pm IST
பகிர்:

தமிழக அரசின் தொடர் முயற்சியின் காரணமாக, காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது. ஆனால் அந்த தீர்ப்பினை நிறைவேற்றுவதற்கான காவிரி மேலாண்மைக்குழுவை அமைக்க மத்திய அரசு காலம் தாழ்த்தியதால், தமிழக அரசு மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், தற்காலிகமாக காவிரி மேற்பார்வை குழுவை நியமித்தது. இதன் கூட்டத்தை ஜூன் 1-ந்தேதி கூட்டவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தற்காலிக காவிரி மேற்பார்வை குழுவின் முதல் கூட்டம் தில்லியில் இன்று  நடந்தது. இக்கூட்டம் குழு தலைவரான மத்திய நீர் வளத்துறை செயலாளர் எல்.கே. சர்க்கார் தலைமையில் நடந்தது. அப்போது, தமிழகத்தில் குறுவை சாகுபடிக்காக உடனே தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று தமிழகம் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால், தற்போதைய சூழ்நிலையில் தமிழகத்துக்கு தண்ணீர் தர முடியாத நிலையில் இருக்கிறோம் என்றும்,தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பது குறித்து 4 வாரத்துக்கு பிறகுதான் பதில் சொல்ல முடியும் என்றும் கர்நாடக தலைமை செயலாளர் கூறினார்.இதனால் கூட்டத்தில் சுமுகமான முடிவு ஏற்படவில்லை. முதல் கூட்டத்தில் எந்த முடிவும் எட்டப்படாததால், ஜூன் 12-ம் தேதி மீண்டும் மேற்பார்வைக்குழு கூடும் என்று நீர்வளத்துறை செயலாளர் சர்க்கார் அறிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments