முகப்பு
தற்போதைய செய்திகள்

சேலத்தில் நேற்று இரவு முழுவதும் பலத்த மழை

சேலம் மாவட்டத்தில் நேற்று இரவு பலத்த காற்றுடன் விடிய விடிய மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான நிலை ஏற்பட்டுள்ளது.

Updated On : 1 ஜூன் 2013, 10:43 am IST
பகிர்:

சேலம் மாவட்டத்தில் நேற்று இரவு பலத்த காற்றுடன் விடிய விடிய மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக வெயில் குறைந்து வானம் மேக மூட்டத்துடன் இருந்தது. ஆனால் மழை பெய்யவில்லை.

இந்த நிலையில், நேற்று இரவு சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை கொட்டியது. சேலத்தின் வாழப்பாடி, சங்ககிரி, ஆத்தூர், இடைப்பாடி உள்ளிட்ட பல பகுதிகளில் பெய்த மழை காரணமாக, தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியது. குளிர்ச்சியான காற்று வீசியதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.