பொள்ளாச்சி அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து
பொள்ளாச்சியில் இருந்து கேரள மாநிலம் பாலக்காடு நோக்கி சென்ற அரசுப் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:11 PM
பொள்ளாச்சியில் இருந்து கேரள மாநிலம் பாலக்காடு நோக்கி சென்ற அரசுப் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
முத்தூர் கிராமம் அருகே குறுகிய பாலத்தின் வழியாகச் சென்று கொண்டிருந்த பயணிகள் பேருந்து, பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்தது. இந்த விபத்தில், பேருந்தில் பயணம் செய்த 9 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.