கனத்த இதயத்தோடு காங்கிரஸில் இருந்து விலகுகிறேன் : கேசவ ராவ்
கனத்த இதயத்தோடு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக ஆந்திராவில் மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான கேசவ ராவ் தெரிவித்துள்ளார்.
கனத்த இதயத்தோடு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக ஆந்திராவில் மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான கேசவ ராவ் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸில் 50 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியுள்ள 72 வயதாகும் கேசவ ராவ், மாநில காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பதவிகளையும் வகித்துள்ளவர். தற்போது காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தெலுங்கானா ராஷ்ட்டிர சமிதி கட்சியில் இணைகிறார்.
இது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய கேசவ ராவ், தான் கனத்த இதயத்தோடு தான் இந்த முடிவை எடுத்ததாகவும், கட்சி மீது தனக்கு எவ்வித வருத்தமோ, புகாரோ இல்லை என்றும் கூறியுள்ளார்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.