கொத்தடிமையில் இருந்து மீட்கப்பட்டவர்கள் சொந்த ஊர் சென்றனர்
திருவள்ளூரில், செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக பணியில் வைக்கப்பட்டிருந்து மீட்கப்பட்ட ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:13 PM
திருவள்ளூரில், செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக பணியில் வைக்கப்பட்டிருந்து மீட்கப்பட்ட ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
திருவள்ளூரில் உள்ள செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக பணியாற்றி வந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 273 பேரை, வருவாய் துறையினர் மீட்டு, அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
பிறகு, அவர்கள் அனைவருக்கும் விடுவிப்புப் பத்திரம் வழங்கப்பட்டு, கையில் ரூ.1000 மற்றும் சொந்த ஊர் செல்வதற்கான ரயில் டிக்கெட் ஆகியவையும் வழங்கப்பட்டது. அவர்களை, திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகள், சென்னை ரயில் நிலையத்தில் தன்பாத் விரைவு ரயிலில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.
Advertisement