முகப்பு
தற்போதைய செய்திகள்

சிவகங்கை : 2 வட்டார மருத்துவ அலுவலர்கள் வீடுகளில் சோதனை

சிவகங்கையில் பணியாற்றும் 2 வட்டார மருத்துவ அலுவலர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

Updated On : 12 ஜூன் 2013, 11:42 am IST
பகிர்:

சிவகங்கையில் பணியாற்றும் 2 வட்டார மருத்துவ அலுவலர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

மருத்துவர்கள் சங்கரன், லட்சுமி காந்தன் வீடுகளில் இன்று லஞ்ச ஒழிப்புக் காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

மருத்துவர் லட்சுமி காந்தனின் வீடு மதுரையிலும், சங்கரன் வீடு தேவகோட்டையிலும் உள்ளது. இவர்களில் லட்சுமி காந்தன் மானாமதுரையிலும், சங்கரன் திருவாடானையிலும் தனியாக கிளினிக் நடத்தி வருகின்றனர். இவர்கள் மீது வந்துள்ள புகாரினைத் தொடர்ந்து இந்த ஆய்வு நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.