முகப்பு
தற்போதைய செய்திகள்

அகிலேஷ் அரசு மீது ஐஏஎஸ் அதிகாரிகள் குற்றச்சாட்டு

உத்தரப்பிரதேச அரசு, அவர்களது கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு நடக்குமாறு தங்களை மிரட்டுவதாக ஐஏஎஸ் அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Updated On : 1 ஆகஸ்ட் 2013, 5:36 pm IST
பகிர்:

உத்தரப்பிரதேச அரசு, அவர்களது கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு நடக்குமாறு தங்களை மிரட்டுவதாக ஐஏஎஸ் அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

உத்தரப்பிரதேசத்தில் பெண் ஐஏஎஸ் அதிகாரி துர்கா சக்தி, மணல் கொள்ளையர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்ததை அடுத்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இதனை கண்டித்து உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதற்கிடையே, உத்தரப்பிரதேச அரசு தங்களுக்கு கட்டுப்பட்டு நடக்காவிட்டால் மோசமான விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் என்று மிரட்டுவதாக ஐஏஎஸ் அதிகாரிகள் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளனர்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.