ஜம்முவில் மேலும் 3 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், கிஷ்த்வார் மாவட்டத்தில் நிகழ்ந்த வகுப்பு மோதலைத் தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜம்முவில் உள்ள உதம்பூர், சம்பா மற்றும் கதுவா
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், கிஷ்த்வார் மாவட்டத்தில் நிகழ்ந்த வகுப்பு மோதலைத் தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜம்முவில் உள்ள உதம்பூர், சம்பா மற்றும் கதுவா ஆகிய மாவட்டங்களில் இன்று ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஜம்மு மற்றும் ரஜௌரியில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களுக்குப் பிறகு, அங்கு சனிக்கிழமை இரவு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதேசமயம், பிரச்னைக்குள்ளான கிஷ்த்வார் மாவட்டத்தில் 3-வது நாளாக ஊரடங்கு உத்தரவு தொடர்ந்தது.ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட இடங்களில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு மேற்கொண்டனர்.