மத்திய அரசு தெலுங்கானா விவகாரத்தை சரியாக கையாளவில்லை: அத்வானி
இந்திய எல்லைப் பகுதியான பூஞ்ச் மாவட்டத்தில், பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய வீரர்கள் 5 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக ஏ.கே. அந்தோணி இரு
இந்திய எல்லைப் பகுதியான பூஞ்ச் மாவட்டத்தில், பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய வீரர்கள் 5 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக ஏ.கே. அந்தோணி இரு அவைகளிலும் அறிக்கை தாக்கல் செய்திருந்தார். அதில், பாகிஸ்தான் ராணுவ சீருடையில் வந்த தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தினர் என தெரிவித்திருந்தார். பின்னர் பாகிஸ்தான் ராணுவத்தினர்தான் இந்த தாக்குதலை நடத்தினர் என்று கூறினார். இது குறித்து பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் அத்வானி கூறுகையில், அந்தோணியின் கருத்துகளால் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு சரி செய்ய முடியாத களங்கம் ஏற்பட்டு விட்டது.மேலும், அரசு தெலுங்கானா விவகாரத்தை சரியாக கையாளவில்லை.இதன் காரணமாகவே நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடங்கியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.