முகப்பு
தற்போதைய செய்திகள்

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் நீட்டிப்பு

நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் செப்டம்பர் 5ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Updated On : 22 ஆகஸ்ட், 2013 at 12:08 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:18 PM

நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் செப்டம்பர் 5ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இம்மாத இறுதி வரை நடைபெற இருந்த இக்கூட்டத் தொடரை, செப்டம்பர் மாதம் 5ம் தேதி வரை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

உணவு பாதுகாப்பு மசோதா உட்பட பல முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ள நிலையில், தற்போது எதிர்க்கட்சிகள் பல்வேறு சர்ச்சைகளை நாடாளுமன்றத்தில் எழுப்பி அவை நடவடிக்கைகளை முடக்கி வருவதால், கூட்டத் தொடரை செப்டம்பர் 5ம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.