நிலக்கரி ஆவணங்கள் மாயம் : கமல்நாத் ஆவேசம்
நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஆவணங்களை பிரதமர் என்ன அவரது வீட்டு ஸ்டோர் ரூமிலா மறைத்து வைத்துள்ளார் என்று மத்திய விவகாரத் துறை அமைச்சர் கமல்நாத் ஆவேசமாக பேசினார்.
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:18 PM
நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஆவணங்களை பிரதமர் என்ன அவரது வீட்டு ஸ்டோர் ரூமிலா மறைத்து வைத்துள்ளார் என்று மத்திய விவகாரத் துறை அமைச்சர் கமல்நாத் ஆவேசமாக பேசினார்.
நாடாளுமன்றத்துக்கு இன்று காலை வந்த கமல்நாத் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, நிலக்கரி ஆவணங்கள் மாயமானது குறித்து பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று பாஜகவினர் கோருவதற்கு கமல்நாத் கண்டனம் தெரிவித்தார். மேலும், காணாமல் போன ஆவணங்களை பிரதமர் அவரது வீட்டிலா மறைத்து வைத்துள்ளார். இது குறித்து அவர் விளக்கம் அளிக்க வேண்டிய அவசியமே இல்லை என்று கூறினார்.
Advertisement