முகப்பு
தற்போதைய செய்திகள்

ராமேஸ்வரம் மீனவர்கள் 41பேரின் காவல் நீட்டிப்பு

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 41 ராமேஸ்வரம் மீனவர்களின் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Updated On : 22 ஆகஸ்ட், 2013 at 10:57 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:18 PM

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 41 ராமேஸ்வரம் மீனவர்களின் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் குற்றம் சாட்டி கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 41 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து வவுனியா சிறையில் அடைத்தனர்.

இவர்களது நீதிமன்றக் காவல் இன்றோடு நிறைவடைவதை அடுத்து, அவர்கள் அனைவரும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்களது காவலை ஆகஸ்ட் 29ம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.