முகப்பு
தற்போதைய செய்திகள்

குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை : தமிழகம், ஆந்திராவில் மழை

வங்காள விரிகுடாவில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் மற்றும் ஆந்திரப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

Updated On : 11 செப்டம்பர் 2013, 12:39 pm IST
பகிர்:

வங்காள விரிகுடாவில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் மற்றும் ஆந்திரப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை மாலை முதலே பரவலாக மழை பெய்தது. சென்னை உட்பட பல இடங்களில் நேற்று நள்ளிரவு முதல் கன மழை பெய்ததால், தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது.

காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், திருவண்ணாமலை உட்பட பல மாவட்டங்களில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் சாலைகளில் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளானார்கள்.

இந்த நிலையில், தமிழகத்தின் வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்னும் 24 மணி நேரத்துக்கு கன மழை நீடிக்கும் என்றும், ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும் என்றும் வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.