சோனியா இன்று அதிகாலை இந்தியா திரும்பினார்
மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு சென்றிருந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி புதன்கிழமை காலை இந்தியா திரும்பினார்.
மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு சென்றிருந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி புதன்கிழமை காலை இந்தியா திரும்பினார்.
தனது மகள் பிரியங்காவுடன் இன்று அதிகாலை சோனியா புது தில்லி விமான நிலையத்தில் வந்திறங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உடல் நிலைக் குறைவு காரணமாக செப்டம்பர் 2ஆம் தேதி அமெரிக்க சென்றார் சோனியா. அங்கு வழக்கமான மருத்துவ பரிசோதனைகளை முடித்துக் கொண்டு இன்று நாடு திரும்பினார்.
Advertisement
கடந்த ஆகஸ்ட் மாதம் மக்களவையில் உணவுப் பாதுகாப்பு மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்றபோது, சோனியாவுக்குத் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து அவர் உடனடியாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சுமார் 5 மணி நேரம் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடிந்து வீடு திரும்பியது குறிப்பிடத்தக்கது.