இளைஞர் தூக்கிட்டு தற்கொலை
வாலாஜாபாத் அருகே இளைஞர் ஒருவர் ஏரிக்கரையில் உள்ள மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
வாலாஜாபாத் அருகே இளைஞர் ஒருவர் ஏரிக்கரையில் உள்ள மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
வாலாஜாபாத்தை அருகே தென்னேரியைச் சேர்ந்த பாலன் மகன் தினேஷ் (26). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பெயிண்ட் கம்பெனியில் வேலை செய்தாராம். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை தென்னேரிக் கரையில் உள்ள கருவேலம் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார்.
இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் தினேஷின் குடும்பத்துக்கு தகவல் கூறியுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த வாலாஜாபாத் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இளைஞரின் உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Advertisement
Advertisement