முகப்பு
தற்போதைய செய்திகள்

புதிய கண்டுபிடிப்புகள் மூலம் வலியைமான நாட்டை உருவாக்க வேண்டும்:  ரோசய்யா

திருவள்ளூரை அடுத்த ஆவடி வேல்டெக் கல்லூரியின் 15-வது பட்டமளிப்பு விழா மற்றும் நிறுவனத் தலைவர் ரங்கராஜனின் சுயசரிதை புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. கல்லூரியின் துணைத் தலைவர் சகுந்தரா ரங்கராஜன், அறங்காவலர் குழு தலைவர் ரங்கராஜன் மகாலட்சுமி ஆகியோர்

Updated On : 12 மே 2013, 3:16 pm IST
பகிர்:

புதிய கண்டுபிடிப்பின் மூலம் மாணவர்கள் வலிமையான  நாட்டை உருவாக்க வேண்டும் என வேல்டெக் பொறியியல் கல்லூரியின் 15-வது பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் ரோசய்யா மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

திருவள்ளூரை அடுத்த ஆவடி வேல்டெக் கல்லூரியின் 15-வது பட்டமளிப்பு விழா மற்றும் நிறுவனத் தலைவர் ரங்கராஜனின் சுயசரிதை புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. கல்லூரியின் துணைத் தலைவர் சகுந்தரா ரங்கராஜன், அறங்காவலர் குழு தலைவர் ரங்கராஜன் மகாலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேல்டெக் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் ஆர்.பி.பாஜ்பாய் வரவேற்றார்.

இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக ஆளுநர் ரோசய்யா பங்கேற்று ரங்கராஜனின் சுயசரிதை புத்தகத்தை வெளியிட்டார். தொடர்ந்து அண்ணா பல்கலை தேர்வில் சிறந்து விளங்கிய 17 மாணவர்களுக்கு தங்கப்பதக்கம் மற்றும் 550 மாணவர்களுக்கு பட்டம் வழங்கிப் பேசியது: நல்ல கல்வியின் அடையாளம் பட்டம் பெறுவதுடன் நிற்பதல்ல. தொலை நோக்குப் பார்வையும், சிந்தனையும் வேண்டும். அதன் மூலம் புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து நாட்டை வலிமையான நாடாக உருவாக்க வேண்டும் என்றார்.

Advertisement

Advertisement

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ் மற்றும் கல்லூரி நிர்வாகிகள் ஹேமாமகேஸ்வரி, ஸ்ரீனிவாஸ், கிஷோர்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.