அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் சாவு
கள்ளிக்குடியைச் சேர்ந்த பாலகுருநாதன்(33)என்பவர் கொத்தனாராக பணிபுரிந்து வந்தார்.இவர் வியாழக்கிழமையன்று விருதுநகரில் கொத்தனார் வேலைக்குச் சென்றுவிட்டு இரவில் தனது
மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே மையிட்டான்பட்டி பிரிவு அருகே நான்குவழிச்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி கூலி தொழிலாளி இறந்து போனார்.
கள்ளிக்குடியைச் சேர்ந்த பாலகுருநாதன்(33)என்பவர் கொத்தனாராக பணிபுரிந்து வந்தார்.இவர் வியாழக்கிழமையன்று விருதுநகரில் கொத்தனார் வேலைக்குச் சென்றுவிட்டு இரவில் தனது இருசக்கரவாகனத்தில் கள்ளிக்குடிக்குச் சென்று கொண்டிருந்தார்.மையிட்டானபட்டி பிரிவு அருகே நான்குவழிச்சாலையில் பாலகுருநாதன் சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.கள்ளிக்குடி போலீசார் பாலகுருநாதன் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.