தீபாவுக்கு வேட்பாளர் பட்டியலில் 34-வது இடம்
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா எம்.ஜி.ஆர்
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை சார்பில் போட்டியிடுகிறார். அவருக்கு படகுச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
எனினும் தீபாவுக்கு வேட்பாளர் பட்டியலில் 34வது இடம்தான் கிடைத்துள்ளது. அதாவது சுயேச்சைகள் வரிசையில்தான் அவர் இருக்கிறார். அவரது பெயரை தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டும்.
அதிமுக அம்மா கட்சி வேட்பாளர் தினகரன் 2வது இடத்தில் இருக்கிறார். அதிமுக புரட்சித் தலைவி அம்மா கட்சி வேட்பாளர் மதுசூதனனுக்கு பெயர் வரிசையில் 4வது இடம் கிடைத்துள்ளது.
Advertisement
Advertisement
மது சூதனன், தினகரனுக்கு கிடைத்த அங்கீகாரம் தீபாவுக்குக் கிடைக்கவில்லை என்பது அவரது ஆதரவாளர்களை மிகவும் கவலையடையச் செய்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.